Saturday, May 17, 2008

மியூச்சுவல் ஃபண்ட் கேள்வி - பதில், நாணயம் விகடன்

''எனக்கு வயது 35. நான் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க விரும்புகிறேன். எஸ்.ஐ.பி. முறையைக் கையாண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொண்டால், நான் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்?''

''கோடீஸ்வரர் ஆக நினைக்கும் உங்கள் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் மாதம் ஒன்றுக்கு 38,500 ரூபாய் முதலீடு செய்வதாகவும், அந்த முதலீடு ஆண்டுக்கு 15% வருமானம் கொடுப்பதாகவும் கொண்டால், 10 வருடத்தில் அந்தத் தொகை ஒரு கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். இது ஓர் உத்தேச மதிப்பீடுதான். முன்பின்னாக மாறவும் செய்யலாம். உங்களுடைய சேமிப்பு போர்ட்ஃபோலியோவை, சிறப்பாகச் செயல்பட்டு வரும் டைவர்சிஃபைட் ஃபண்ட் திட்டங்களுக்கு 65%, மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளுக்கு 25% செக்டோரல் ஃபண்டுகளுக்கு 10% எனப் பிரித்துக்கொள்ளலாம்.''

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தேன். தற்போது அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறினால் எனக்கு கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டா? உண்டு என்றால் எத்தனை சதவிகிதம்?

''நீங்கள் முதலீடு செய்து இன்னும் ஓராண்டு முடியவில்லை என்பதால் உங்கள் முதலீட்டுக்கு கேப்-பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டு. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த டேக்ஸின் சதவிகிதம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த இது, இந்த வருடம் 15 சதவிகி-தமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் 10 சதவிகிதமாக இருக்கும்போது நீங்கள் முதலீடு செய்திருந்தாலும், முதலீட்டில் இருந்து வெளியேறும்போது உள்ள விதிமுறைகளைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எனவே உங்கள் முதலீட்டில் இருந்து வரும் லாபத்துக்கு 15% கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டு. இது எஸ்.ஐ.பி. முறை முதலீட்டுக்கும் பொருந்தும்.''

தற்போது சந்தை உள்ள நிலையில், எந்த செக்டோரல் ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்?

''செக்டோரல் ஃபண்ட் முதலீடு என்பது டைவர்சிஃபைட் ஃபண்ட் முதலீட்டைக் காட்டிலும் அதிக ரிஸ்க் கொண்டது. உங்களுடைய வயதைப் பொறுத்து, 20-லிருந்து 25 சதவிகிதத்தை செக்டோரல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்கள், மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள செக்டோரல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது சந்தை ஏற்றத்-தாழ்வுகளோடு இருப்பதால், கையில் உள்ள பணம் முழுவதையும் முதலீடு செய்யவேண்டாம். சந்தையின் ஏற்றத்தைப் பொறுத்து கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை மேற்கொள்வதுதான் சரியான வழி.''

சில மார்க்கெட்டிங் நிறுவனங்கள், 50% டிவிடெண்ட் தரப்போவதாகச் சொல்லி, சில மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்குவதற்கு ஆசை காட்டுகின்றன. பொதுவாக டிவிடெண்ட் கொடுக்கும் சமயத்தில் முதலீடு செய்வது லாபமானதாக இருக்குமா?

அப்படி பிரத்தியேகமான லாபம் எதுவும் இல்லை. ஓப்பன் எண்டட் திட்டங்களில் டிவிடெண்ட் கொடுக்கப்படும்போது, அதனுடைய என்.ஏ.வி. மதிப்பு குறைந்துவிடும். இதனால், நீங்கள் முதலீடு செய்த தொகையின் மொத்த மதிப்பும், வைத்திருக்கும் யூனிட்டின் மதிப்பும் குறையும். மொத்தமாகப் பார்த்தால் லாபம் என்று எதுவும் இருக்காது. டிவிடெண்ட் என்பது உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்து உங்களுக்குக் கொடுப்பது போலதான். முதலீட்டுக்காலத்தில் இடையிடையே பணம் தேவைப்-படுபவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். அதேநேரத்தில் நீண்ட-கால அடிப்படையில் குரோத் ஆப்ஷன்தான் லாபகரமானது.

மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்தை அப்சல்யூட் ரிட்டர்ன், ஆனுவலைஸ்டு ரிட்டர்ன் என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறார்களே, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒருவர், தன் பணத்தை முதலீடு செய்ததற்கும், அதை வெளியே எடுப்பதற்கும் இடையேயான மொத்த முதலீட்டுக் காலத்தில் அது எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைக் கணக்கிடுவதுதான் அப்சல்யூட் ரிட்டர்ன். ஆனுவலைஸ்டு ரிட்டர்ன் என்பது, ஒவ்வொரு வருடமும் உங்கள் முதலீடு எந்தளவுக்கு வரு-மானத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைக் கணக்கிடுவது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்-பவர்கள், ஆனுவலைஸ்டு ரிட்டர்னை கணக்கில் எடுத்துக்-கொண்டுதான் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நான் வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். ஆனால், என்னிடம் பான் கார்டு இல்லை. இங்கிருந்தே பான் கார்டு வாங்க முடியுமா? அதற்கான நடைமுறை என்ன? விண்ணப்பித்தால் எவ்வளவு காலம் ஆகும்?

வெளிநாடுகளில் இருந்துகொண்டே இந்தியாவில் பான் கார்டு வாங்கமுடியும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம், அல்லது விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து பூர்த்தி செய்து தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி, Income Tax PAN Services Unit, National Securities Depository Limited, 1st floor,Times Tower, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel (W), Mumbai - 400013, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி https://tin.tin.nsdl.com/pan/index.html

டேக்ஸ் சேவிங்க ஃபண்ட் முதலீட்டை இப்போதிருந்தே ஆரம்பிப்பது நல்லதா, அல்லது நிதி ஆண்டு முடிவு வரை காத்திருக்கலமா?
வரி சேமிப்பு முதலீட்டை இப்போதிலிருந்து ஆரம்பிப்பதுதான் சரியான முறை. மாதா மாதம் ஒரு தொகையை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும்போது, பங்குச்சந்ந்தையின் ஏற்றத் தாழ்வுகளைப் பொறுத்து நிறைய யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நித் ஆண்டின் முடிவில் சந்தை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஒருவேளை சந்தை உச்சத்தில் இருந்தால் உங்கள் முதலீட்டுக்கு குறைவான் யூனிட்டுகளே கிடைக்கும். மேலும், ஆரம்பத்தில் இருந்தே முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமும் கிடைத்திருக்கும்.

''கடந்த ஓராண்டு காலமாக எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 1,000 ரூபாய் வீதம் முதலீடு செய்துவருகிறேன். தற்போது என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளதால், என் முதலீட்டின் அளவை உயர்த்தலாம் என எண்ணுகிறேன். கூடுதல் தொகையையும் முந்தைய திட்டத்திலேயே முதலீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா..?''

''ஒரு நிறுவனத்தின் எஸ்.ஐ.பி. திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் கட்டி வருகிறீர்கள் என்றால், திடீரென்று அந்தத் தொகையைக் கூட்டுவதற்கு வாய்ப்பில்லை. கூடுதலாக செலுத்த விரும்பும் தொகையை அதே திட்டத்தில் புதிய முதலீடாகத்தான் செய்யவேண்டும்.''


''வங்கிப் பங்குகளின் விலை இறங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் வங்கித் துறையில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?''

''பேங்க்கிங் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது சரியான தருணம்தான்! பங்குச் சந்தை ஏற்றத்-தாழ்வுகளோடு இருக்கும் சமயத்தில், சிறிது சிறிதாக இந்த செக்டார் ஃபண்டில் தாழ்வுநிலையின்போது முதலீடு செய்யலாம். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, வங்கித்துறை லாபகரமானது என்பதால், இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம்.''

''என் வயது 35. மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்போதிருந்தே ஓய்வுக்காலத்துக்கு என தனியே ஒரு தொகை ஒதுக்குவதாக இருந்தால், அதை எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது?''

''பென்ஷனுக்கு ஒதுக்கத் திட்டமிட்டிருக்கும் தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய-லாம். இவ்வாறு செய்யும்போது, டைவர்சிஃபைட் திட்டங்-களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த வகையில் தற்-போது கோட்டக் 30, சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸ், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ரிலையன்ஸ் குரோத் போன்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன.''

''மியூச்சுவல் ஃபண்டில் ஒருமுறை முதலீடு செய்பவர்களுக்கு ஒரேமுறைதான் ஸ்டேட்மென்ட் அனுப்புவார்களா, அல்லது ஒவ்வொரு வருடமும் அனுப்புவார்களா?''

''ஒருமுறைதான் அனுப்புவார்கள். அதன்பின் உங்களுக்கு எப்போது ஸ்டேட்மென்ட் தேவைப்படுகிறதோ, அப்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு ஃபோலியோ நம்பரைச் சொன்னால் மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதுபோக, பொதுவாக வருடத்துக்கு ஒருமுறை நீங்கள் முதலீடு செய்திருக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நியூஸ் லெட்டர், வருடாந்திர ரிப்போர்ட்டுகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை அனுப்பி வைப்பார்கள்.''

நன்றி: நாணயம் விகடன்

Friday, February 1, 2008

வருமான வரி கட்ட(விலக்குக்கு)த் தயாரா!?

பங்குச்சந்தைக்கு இணையாக இனி சில மாதங்களுக்கு அதிகம் உச்சரிக்கப்படும் சொல்: வருமானவரி-யாகத்தான் இருக்கும்.

நாணயம் விகடனில் வரும் ஒவ்வொரு பக்கமும் மிகுந்த பயனுள்ளது என்றாலும், தலைப்புக்கு தொடர்புடைய திரு. என்.எஸ்.ஸ்ரீனிவாசன் எழுதும் வரி கட்டாமல் வாழலாம் வாங்க.. என்ற தொடரிலிருந்து வருமான வரி விலக்குக்கு உதவும் 80சி பிரிவு பற்றி:

-------------- நன்றி : நாணயம் விகடன் -----------------
இந்திய வருமான வரிச் சட்டத்தின் (1961)படி, உருவானதுதான் 80---சி பிரிவு. இதன்கீழ் ஒரு நிதி ஆண்டில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குப் பெறமுடியும்.

பணியாளர்கள் பிராவிடன்ட் ஃபண்ட்

அரசுத்துறை ஊழியர்கள் அவர்களுக்கான அரசு பிராவிடன்ட் ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு. பொதுத்துறை, தனியார் நிறுவனங்-களில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளத் தொகை-யில் 12%, பணியாளர் பிராவிடன்ட் ஃபண்டாக (E.P.F. -Employees Provident Fund) பிடிக்கப்படுகிறது. வருமான வரி கட்டுவதிலிருந்து இந்தத் தொகைக்கு முழுவிலக்குப் பெறலாம். தனியார் நிறுவனம் என்கிறபோது, பிடிக்கப்படும் தொகைக்கு இணையாக நிறுவனமும் பணம் செலுத்தும் என்பதால், இது பணியாளர்களுக்கு இரட்டை லாபத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த முதலீடு மற்றும் சேமிப்பு, வரிச் சலுகையை அளிப்பதோடு, வரி கட்டுபவர் மற்றும் அவரது குடும்-பத்துக்கு நிதிப் பாதுகாப்பையும் அளிப்பதாக இருக்கிறது. மேலும், விரும்பும்பட்சத்தில் தனியார் நிறு-வன ஊழியர், இந்த 12%-க்கு இணையாக மேலும் 12%-ஐ தன் சம்பளத்தில் பிடித்துக்கொள்ள நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளலாம். இந்தக் கூடுதல் தொகைக்கு நிறுவனம் தன் பங்காக எதையும் செலுத்தாது. அதே நேரத்தில், இந்தக் கூடுதல் முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இதுபோன்ற சலுகை அரசு ஊழியர்-களுக்கும் இருக்கிறது. இப்படிச் சேரும் பி.எஃப். தொகையை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டுக்கு தற்போது 8.5% வட்டி தரப்-படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான ரசீதை பி.எஃப். அலுவலகம் அளிக்கிறது. இதைப் பெற்று பணியாளர்கள், தங்களிடம் பிடிக்கப்படும் தொகை கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

தனியார் துறை பணியாளர்களைப் பொறுத்தவரை, சம்பளம் 6,500 ரூபாய்க்கு மேற்படும்போது, பிராவிடன்ட் ஃபண்டுக்கு பணம் செலுத்துவது கட்டாயமில்லை. ஆனால், எல்லோரும் செலுத்துவது நல்லது. இந்த முதலீடு மற்றும் அதன் மூலமான லாபத்துக்கும் வரி கிடையாது!

பொது பிராவிடன்ட் ஃபண்ட்

பணியில் இல்லாத சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம் பொது பிராவிடன்ட் ஃபண்ட் (P.P.F- Public Provident Fund). இந்தத் திட்டத்தில், ஏற்கெனவே நிறுவனத்தால் பி.எஃப். பிடிக்கப்படும் பணியாளர்களும் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி 8%. இதில் முதலீடு செய்யும் அனைவரும் வருமான வரிச் சலுகையைப் பெறலாம்.

இந்த முதலீட்டை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளலாம். நிதி ஆண்டில் குறைந்த-பட்சம் 100 ரூபாய், அதிகபட்சம் 70,000 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து, வரிவிலக்குப் பெறலாம். இந்தக் கணக்கை தனிநபர்கள், மைனர்கள், ஹெச்.யூ.எஃப். பெயரில் தொடங்கலாம். தனி நபர்கள், தங்கள் பெயர், மனைவி பெயர், குழந்தைகளின் பெயரில் செலுத்-தப்படும் பி.பி.எஃப். தொகைக்கு வரு-மான வரிவிலக்குப் பெறலாம்.

பி.பி.எஃப். முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கிடையாது. நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே (ஏப்ரல்) முதலீடு செய்ய ஆரம்பித்தால், முழு ஆண்டுக்கும் வரி இல்லாத வட்டி லாபத்தை அனு-பவிக்க முடியும். பி.பி.எஃப். முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு முன் முடிக்க முடியாது. அதே நேரத்-தில், ஆறு ஆண்டுகள் கழித்து முதலீட்டில் ஒரு பகுதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுத்துக்-கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோல், இத்தொகை-யிலிருந்து கடனும் வாங்கமுடியும்.

ஆறாவது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பி.பி.எஃப். திட்டத்தில் மறு முதலீடு செய்வது மூலம் வருமான வரிச்சலுகையைப் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் (Life Insurance Policies) என்பது முதலீடு, குடும்-பத்தினர் பாதுகாப்பு, வரிச் சேமிப்பு கருவி என மூன்-றும் கலந்ததாக இருக்கிறது. இதனால், பாலிசி முடி-வில் பணப்பலன் கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள்தான் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன.

பாலிசி இறுதியில் பணப் பலன் எதுவும் இல்லாத டேர்ம் பாலிசியை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால், இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு. பாலிசி க்ளைம் மூலம் கிடைக்கும் தொகை அல்லது பணப் பலனுக்கு வருமான வரி கிடையாது. மேலும், தன் பெயரில், மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில், ஹெச்.யூ.எஃப். பெயரில் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கும் தனிநபர் விலக்குப் பெறலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாலிசித் தொகையில் 20%-க்கு மேல் பிரீமியம் இருந்தால், வரு-மான வரிவிலக்குப் பெறமுடியாது.

இந்த பாலிசிகளை அட-மானம் வைத்து கடன் வாங்குவது மூலம் சொத்து வாங்குவது, கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான தேவையை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். பர்சனல் லோனுக்கான வட்டியோடு ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான கடன் வட்டி குறைவாகவே இருக்கிறது.

யூலிப்

பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் முதலீட்டாளருக்கு ஆயுள் காப்பீட்டை அளிப்பதோடு, வருமானத்தையும் அளித்து வருகின்றன. இந்த பாலிசிகள் முற்றி-லும் பங்குச் சந்தை சார்ந்தது, முற்றிலும் கடன் சார்ந்தது, இரண்டும் கலந்தது என்பன போன்று பல வாய்ப்புகளுடன் இருக்கின்றன. முதலீட்டாளர் தன் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன் இருக்கும். நிதி முதலீடு, பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் மட்டும் இந்த யூலிப் பாலிசிகளை எடுப்பது நல்லது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, இந்த யூலிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் யூனிட்களின் என்.ஏ.வி. மதிப்பைக் கவனித்துவருவது அவசியம்!

தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வரிச் சேமிப்புக்காக இந்தியர்கள் அதிக முதலீடு செய்தது தேசிய சேமிப்புப் பத்திரங்களில்தான் (National Saving Certificates). வட்டி விகிதக் குறைவுக்கு பிறகு அதில் முதலீடுசெய்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. 8% வட்டி வருமானம் அளிக்கும் இதில் செய்யப்படும் முதலீட்டை ஆறு ஆண்டுகள் கழித்துதான் எடுக்கமுடியும். வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பதும் இதனைப் பலரும் விரும்பாததற்கு முக்கியக் காரணம். இதில் தனிநபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப்-கள் முதலீடுசெய்து வரிச்சலுகை பெறலாம்.

வருமான வரியைச் சேமிக்க 80-சி பிரிவின் கீழ் இருக்கும் இதர திட்டங்கள் பற்றி...!

வரி சேமிப்பு வங்கி டெபாசிட்கள்

வங்கிகளில் செய்யப்படும் ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தை அனைத்து வங்கிகளும் கொண்டுள்ளன. வட்டிவிகிதம் சுமார் 8.5% தொடங்கி 10.5% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. டெபாசிட் மூலமான வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். இதில், தேசிய சேமிப்புப் பத்திர முதலீட்டைவிட வட்டி அதிகமாகக் கிடைக்கும். பி.எஃப். முதலீட்டைவிட, அதிக வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், வட்டி வருமானத்துக்கு வரிகட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம்!

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடும் இ.எல்.எஸ்.எஸ் (E.L.S.S) ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும் வரிச்சலுகையைப் பெறமுடியும். இதனை தனி நபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப். பெயரில் மேற்கொள்ளலாம். இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கமுடியாது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 65% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், மேலே கூறப்-பட்ட முதலீட்டுத் திட்டங்களைவிட, அதிக ரிட்டர்னைக் கொடுத்துவருகிறது. அதேநேரத்தில், பங்குச் சந்தைக்கான ரிஸ்க்கையும் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. மேலும் முதலீட்டை மூன்றாண்டு கழித்து எடுக்கும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, பூஜ்ய சதவிகிதம்தான்.

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துதல்

வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தப்படும், அசலில் ஒரு நிதி ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை, வரிச்சலுகை பெறலாம். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும்போது மனைக்குக் கட்டும் முத்திரைத்-தாள் கட்டணத்துக்கும் வரிச்சலுகை இருக்கிறது. இதனைப் பத்திரப்பதிவு நடந்த நிதி ஆண்டில் கோரிப் பெறவேண்டும். வீட்டை மாற்றிக் கட்டுதல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கான கடனுக்கு வரிச்சலுகை கிடையாது. மேலும், மனை வாங்குவதற்கும் வரிச் சலுகை இல்லை.

வீட்டுக் கடனுக்கான வட்டியில், ஓராண்-டில் 1.5 லட்சம் ரூபாய்வரை, வரிச்சலுகை பெறலாம்.

இதர சேமிப்புத் திட்டங்கள்

இந்த வாய்ப்புகளைப் போலவே, தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen Savings Scheme) மற்றும் தபால் அலுவலக டைம் டெபாசிட் (Post Office Time Deposit) ஆகிய இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் 80-சியின் கீழ் வருமான வரிச்சலுகை உண்டு என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 55-60 வயதுக்கு உட்பட்ட விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்கள், 60 வயதான மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். பொதுத்துறை வங்கிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆண்டுக்கு 9% வருமானம் அளிக்கும் இந்த முதலீடு ஐந்தாண்டுகளுக்கானது. ஒரு ஆண்டில் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய். அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் வரி-விலக்குப் பெற முடி-யும். இத்திட்டத்தின் மூலமான வட்டி வருமானத்-துக்கு வரி பிடித்தம் இருக்-கிறது.

இந்தத் திட்டம் வங்கிகளின் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும்போது, சற்று லாபகரமானது என்று சொல்லாம்.

தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்த-பட்ச முதலீடு 200 ரூபாய். அதிகபட்சத்துக்கு எல்லை இல்லை. இந்தத் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என முதிர்வுக் காலம் இருக்கிறது. இவற்-றுக்கு முறையே 6.25%, 6.5%, 7.25% மற்றும் 7.5% வட்டி தரப்படுகிறது. ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு மட்-டுமே வரிச்சலுகை தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை விட, வழக்கமான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமானதாக இருக்கும்.

கல்விக் கட்டணம்

கல்விக்காகச் செலவிடுவதை ஒரு முதலீடாக மத்திய அரசு கருதுவதால், அதற்கும் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. தனிநபர், அவருடைய துணை, குழந்தைகள் அல்லது ஹெச்.யூ.எஃப். உறுப்பினர் போன்றோருக்கு கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. மேலே குறிப்பிட்டவர்கள் இந்தியாவில் ஏதாவது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி அமைப்பில் முழு நேரமாகப் படிப்பதற்காகச் செலுத்தும் கல்விக் கட்-டணத்துக்கு வரிவிலக்குக் கோரலாம். தனிநபரின் இரு குழந்தைகளுக்குத்தான் இவ்வாறு வரிச்சலுகை கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்களுக்கும் பிப்ரவரி மாதத்திலேயே ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கு தேர்வு ஜுரம் என்றால், மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமான வரி ஜுரம்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற அளவுக்குக் குழம்பிப் போயிருக்கிறார்கள். வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி-யின் கீழ் வரும் முதலீட்டுத் திட்டங்கள் தவிர, வேறு சில முதலீடு மற்றும் செலவுகளுக்கும் வருமானவரி விலக்குப் பெறமுடியும். அவை பற்றிய விவரங்கள்..!

மருத்துவக் காப்பீடு 80 D

மருத்துவச் செலவு மிகவும் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், மாதச் சம்பளக்காரர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகியிருக்கிறது. வருமானவரிச் சட்டப் பிரிவு 80 D-ன் கீழ், தனி நபர் அல்லது ஹெச்.யூ.எஃப்-க்காக ஓராண்டில் இந்த பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில், 15,000 ரூபாய்க்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெறலாம். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 20,000 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவர், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலுத்தும் மெடிக்ளைம் பாலிசிக்கான பிரிமீயத்துக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். சில பெரிய நிறுவனங்கள், தங்களின் ஊழியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் சொந்தச் செலவிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துத் தருகிறார்கள். அதுபோன்ற நிலையில், அலுவலகம் எடுத்துள்ள பாலிசியின் மூலம் எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்ற விவரத்தை அறிந்து, அதில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிசியை எடுத்து, அதற்கான பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம். வரிவிலக்குப் பெற பிரீமிய ரசீதின் நகலை பணிபுரியும் நிறுவனத்திடம் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவச் சிகிச்கைக்கான செலவு - 80 DD

தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ (Dependant) அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்பத்தில் யாராவது உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று (Disability) அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச்சலுகை பெறலாம். இந்தவகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். மிகவும் தீவிரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் (Dependant) அவருடைய மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர-சகோதரிகள் போன்ற-வர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்-பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே வரிச்சலுகை பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்-துவ அதிகாரியிடமிருந்து, அதற்குரிய படிவத்தில் சான்-றிதழ் வாங்கி கொடுக்கும்பட்சத்தில்தான் இந்த வரிச்-சலுகையைப் பெறமுடியும்.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை - 80 DDB

மத்திய நேரடி வரி வாரியம், சில தீவிர நோய்களுக்குப் பெறப்படும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு வரிவிலக்கு பெறலாம் எனச் சொல்லியுள்ளது. அந்த வகை நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓராண்டில் அதிகபட்சம் 40,000 ரூபாய்க்கு வரிச்சலுகை பெறமுடியும். இதுவே, மூத்த குடிமக்கள் என்கிறபோது, 60,000 ரூபாய் வரை சலுகை இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், எய்ட்ஸ், கேன்சர், சிறுநீரகக் கோளாறு போன்றவை தீவிர நோய்கள் பட்டியலில் இருக்கின்றன. இப்பிரிவில் வரிச்சலுகை பெற, வருமான வரி தாக்கல் படிவத்துடன் அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்றிதழையும் இணைத்துக் கொடுப்பது அவசியம்.

கல்விக் கடனுக்கான வட்டி - 80 E

தனி நபர் ஒருவர் தனக்காகவோ, உறவினர்களுக்காகவோ இந்தியாவில் உயர்கல்வி படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கியிடமிருந்து வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதில் 80 E பிரிவின் கீழ் வரிச்-சலுகை பெறலாம். உயர்கல்வி என்பது பட்டப்-படிப்பு, பட்டமேற்படிப்பு (பொறியியல், மருத்துவம், மேலாண்மை) போன்றவற்றைக் குறிக்கும். வட்டி கட்டத் தொடங்கியதிலிருந்து 7 ஆண்டு வரை, வட்டி கட்டி முடிக்கும் வரைக்கான காலம்... இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை வரிச்சலுகை உண்டு.

உடல் ஊனமுற்றவர்களுக்கு வரிச்சலுகை - 80 U

வரி கட்டும் ஒருவர் உடல் ஊனமுற்று இருந்தால், அவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரித் தள்ளுபடி பெறமுடியும். மிகவும் தீவிரமான உடல் ஊனமானால் இந்தத் தொகை 75,000 ரூபா-யாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரித் தள்ளுபடியைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி-யிடமிருந்து அதற்-குரிய ஆவணத்தில் சான்-றிதழ் பெறுவது அவசியம்!

-------------- நன்றி : நாணயம் விகடன் -----------------

இனி அடுத்த பதிவில், வருமான வரிக்கு உதவும் மிக நல்ல பரஸ்பரநிதி திட்டங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, January 22, 2008

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

கடந்த சிலதினங்களாக நிலவும் பங்குச்சந்தை கறுப்புதினங்கள் ஏற்கனவே முதலிட்டவர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தாலும், புதிதாக உள்ளே நுழைய நினைப்பவர்களுக்கும், மேலும் வாங்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல தருணமாகவே படுகிறது. பரஸ்பரநிதி முதலீட்டைப் பொருத்தவரை நீண்டகால தொடர்முதலீடுதான் (long term, Systematic Investment Plan(SIP)) சிறப்பானது என்றாலும், காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளவேண்டும்தானே!

மிகச்சிறந்த பரஸ்பரநிதி திட்டங்கள் என்று ValueResearchOnline மற்றும் CRISIL மூலம் வகைப்படுத்தபட்டவைகள் கூட யூனிட் மதிப்பை 20%க்கு மேல் இழந்திருக்கிறது. அதனால், ஒரு வருடத்துக்கும் மேல் உங்கள் முதலீடு காத்திருக்க முடியும் என்றால், இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல பலன் கொடுக்கலாம். கீழே உள்ள அட்டவணையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் கடந்த 52 வார காலத்தில் அடைந்த உச்சபட்ச மதிப்பு (பெரும்பாலும் கடந்த இருவாரங்களுக்கு முன்) மற்றும் இப்போதைய மதிப்பும் கொடுத்துள்ளேன். அத்துடன், அந்த திட்டங்களின் தராதரம் அறிய, அத்திட்டம் கடந்த ஒரு வருடத்தில் கொடுத்த வருமான சதவிகிதம், மற்றும் 2, 3, 5 வருட சராசரியும் கொடுத்துள்ளேன். மேலும் பகுத்தறிந்து, முதலீடு தொடர்பான முடிவெடுங்கள்.


இந்தத் திட்டங்கள் பற்றிய மேல்விபரங்களுக்கு அல்லது பரஸ்பரநிதி முதலீடு தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் இங்கு பின்னூட்டவோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

பரஸ்பரநிதி முதலீடுகள் சந்தை நிலவரத்தைப்பொருத்தது. பங்குச்சந்தை தொடர்பான மற்ற முதலீடுக‌ள் போலவே பரஸ்பரநிதியின் வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்குட்பட்டது. முந்தைய வருட செயல்பாடுகள், வருங்காலத்துக்கு உத்தரவாதமாக எடுத்துக்கொள்ள இயலாது.

Tuesday, January 15, 2008

பரஸ்பரநிதி (Mutual Fund) மூலம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு!

இந்திய, வெளிநாடுவாழ் இந்திய (NRI) மற்றும் இந்திய வம்சாவழியினருக்கு (PIO)

பரஸ்பரநிதி (Mutual Fund) மூலம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு!

இனிய வணக்கம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள். புதிய வருடம் உங்களுக்கு எல்லா இன்பத்தையும், வளங்களையும் வழங்கட்டும. "தைப்பிறந்தால் வழிபிறக்கும்" என்ற பெரியோர் வாக்கு வெறும் வாழ்த்தாக மட்டும் இல்லாமல், உங்கள் செல்வத்தை சேர்க்க, வளர்க்க, பாதுகாக்க, எனக்குத் தெரிந்ததை, நான் இதுவரை கற்றவற்றை, அனுபவத்தை ஒரு நண்பணாக உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு இந்த மடல்.

பரஸ்பரநிதி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) பற்றிய அறிமுகம்தான் இது. நாம் பொதுவாக செய்யும் முதலீடு: தங்கம், வீடு/நிலம், வங்கி/அஞ்சலக வைப்பு நிதி (Fixed Deposit) போன்றவைகள்தான்.

இதில் தங்கம்தான் நம்மில் பலர் செய்யும் முதலீடு என்றாலும், இப்போது விற்கும் விலையில் (கடந்த 27 வருடங்களில் கிட்டத்தட்ட உச்சபட்ச விலை) தங்கம் வாங்கும் (நி)விலையில் இல்லை. அதிலும், தங்கத்தை நாம் ஆபரணங்களாகவே பார்க்கிறோம். அதனால் தங்கத்துக்கு கொடுக்கும் மதிப்போடு, செய்கூலி, சேதாரம், கற்கள் என்று அதிக விலை கொடுத்து வாங்குகின்றோம். அதிலும் வாங்கிய சிலவருடங்களில் பழைய ஃபேஷன் என்ற பெயரில் அதை மாற்ற/அழித்துச் செய்ய மீண்டும் செலவு. வெகுசிலரே இதிலிருந்து மாறுபட்டு நகைகளாக அதிகம் இல்லாமல், தங்க நாணயமாகவோ, தங்கக்கட்டிளாகவோ (gold bars) முதலீடு செய்கின்றனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, தங்கத்தை வைத்திருந்து காப்பாற்றுவது பெரிய விஷயமாக இருக்கிறது.

அடுத்து வீடு/நிலம் தொடர்பான சொத்துக்கள். இப்போதிருக்கும் சூழ்நிலையில் பலருக்கு கனவாகவும், சிலருக்கு வாழ்நாள் சாதனையாகவும் இருக்கிறது. இதையும் மீறி வெகுசிலரே வெற்றிகரமாக இதில் முதலீடு செய்ய முடிந்திருக்கிறது,. இதிலும் இப்போது வில்லங்கமில்லாமல் சொத்து வாங்குது, வாங்கிய சொத்தை பாதுகாப்பது அரிதாக இருக்கிறது..

இன்னும் நம்மில் பலருக்கு முதலீடு என்பது பெரியவிஷயமாகவே இருந்து வருகிறது. நமது வசதிக்கேற்ப சில ஆயிரங்களில் (ஏன் மாதாமாதம் ரூ.50 கூட) மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து பின்னர், சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்தப் பணத்தை, பெரிய அளவிளான முதலீடு/தேவைகளுக்குப் பயன் படுத்த இயலும். பங்குச்சந்தை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து 40%க்கு மேல் வருமானம் அளித்திருந்தாலும் அதில் பொதுமக்களின் முதலீடு 6.3% என்ற அளவுதான்!

மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கும், தங்கம் அல்லது வங்கி வைப்புநிதியில் முதலீடு செய்வதற்குமான ஒரு ஒப்பீடு கீழே.

முதலீட்டுக்காலம்

முதலீடு (ரூ.)

வைப்பு நிதி (ரூ)

தங்கம் (ரூ)

பங்குச்சந்தை (ரூ)

5 வருடங்கள்

60,000

69,393

99,080

141,790

10 வருடங்கள்

120,000

174,495

222,893

311,032

15 வருடங்கள்

180,000

357,569

322,968

532,467

20 வருடங்கள்

240,000

667.431

415,269

1,525,423

25 வருடங்கள்

300,000

1,159,971

515,986

3,902,159

உதாராணத்துக்கு, வருடத்துக்கு 12000 அல்லது 5 வருடத்தில் ரூ. 60,000 வைப்புநிதியில் முதலிட்டால் 69,393 அல்லது தங்கத்தில் முதலிட 99,080-ஆகவும், அதே 60000 பங்குச்சந்தையில் முதலிட ரூ. 141,790 ஆகிறது என ஒரு கணக்கு சொல்கிறது.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமானதுதான். ஆனால் பங்குவிலை சந்தை நிலவரத்துக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் ஒரு பாதுகாப்பற்ற முதலீடாகவே வகைப்படுத்தப்படுகிறது என்ற நிலையில்:
  • பங்குச்சந்தையில் அனுபவமுள்ள நிறுவனங்கள்/நிதி நிர்வாகிகள் மூலம் நாம் முதலீடு செய்யமுடிந்தால்,

  • தங்கம், வீடு/நிலம் அல்லது வைப்பு நிதி போன்றல்லாமல், நமது தேவைக்கேற்ப, வருமானத்துகேற்ப முதலீடு செய்யும் வாய்ப்பிருந்தால்

  • நினைத்தநேரம் வாங்க/விற்க முடியும் வாய்ப்பிருந்தால்

  • வயது, முதலீடு, எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கிற லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கண கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய முடிந்தால்,

  • கையைச் சுட்டுக் கொள்ளாமல் அதேசமயம் கணிசமாகச் சம்பாதிக்கும் தாரக மந்திரம் தெரிந்தால்,

  • நம்முடைய முதலீடு ஒரு சிலவருடங்களில் இருமடங்காகும் வாய்ப்பிருந்தால்,

முயற்சி செய்வோம்தானே! ஆம், பரஸ்பரநிதி அளிக்கும் வாய்ப்புகள்தான் மேலே உள்ளவை.
  • நீங்கள் வருமானவரி விலக்குக்காக (Tax Relief) முதலீடு செய்ய நினைத்தாலும் (ELSS Funds),

  • வைப்புநிதியை விட அதிக வளர்ச்சி இருக்கவேண்டும் ஆனால் பாதுகாப்பானதாக வேண்டும் என்றாலும் (Debt Funds),

  • மொத்தமாக‌ ஒரு தொகை முதலிட்டு விட்டு, மாதாமாதம் ஒரு தொகை கிடைக்குமா என்ற வகையாயிருந்தாலும்(MIP),

  • ஓரளவு இழப்பு வந்தால்கூட பரவாயில்லை, ஆனால் முடிந்தவரை நல்ல லாபம் வேண்டும் என்றாலும்(Diversified Equity Schemes),

  • மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது 3, 6 மாதத்துக்கு ஒருமுறை உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக முத‌லீடுசெய்ய நினைத்தாலும் (Systematic Investment Plan – SIP தொடர்முதலீடு)

  • எனக்கு அடுத்த 3 வருடத்துக்கு இந்தப்பணம் தேவைப்படாது ஆனால் நல்ல லாபம் எதிர்பார்ப்பேன் என்றாலும்(Closed End Funds),

  • நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுபோல், எனக்கு வங்கி சார்ந்த பங்குத்திட்டம், கட்டுமானத்துறை, உள்கட்டமைப்பு நிறுவனப் பங்குகள், தகவல்தொழில்நுட்ப பங்குகள் என குறிப்பிட்ட துறை/பிரிவு சார்ந்த அதிக‌ரிஸ்க் அதேநேரம் மிதமிஞ்சிய வருமானம் என்ற துணிச்சல்காரராய் இருந்ந்தாலும் (Thematic/Sector Funds – Banking, Infrastructure, IT, Energy, Power Sector, FMCG, Pharma etc.)

  • பங்குச்சந்தைக் குறியீட்டின் ஆதாரமாக இருக்கும் நிறுவனங்களில் மட்டும் முதலிட நினைத்தாலும் (Index Funds),

  • தங்கத்தை வாங்கி பாதுகாப்பதற்குப் பதில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் தேவை என்றாலும் (Gold ETF)

உங்கள் முதலீட்டுத்தேவை இதுபோன்று எதுவாக இரு‍ந்தாலும் உங்களுக்கு பரஸ்பரநிதியில் ஒரு தீர்வு/திட்டம் உண்டு.

பரஸ்பரநிதி என்றால் என்ன? எப்படி அது லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறது? எது நல்ல பரஸ்பரநிதி? பரஸ்பரநிதியில் முதலீடு செய்தால் நஷ்டம் வரவே வராதா? இதுவும் பங்குச் சந்தைதானாமே? ஆயிரம் கேள்விகள். அதைவிட அதிகக் குழப்பங்கள் இருக்கலாம். கவலையை விடுங்கள்.

  • பதிவுபெற்ற பரஸ்பரநிதி ஆலோசகராக, விநியோகிப்பாளராக அதற்கும் மேல் சக முதலீட்டாளராக உங்களுக்குக் கைகொடுக்க,

  • என்னுடைய முதலீட்டு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள,

  • ப‌ரஸ்பரநிதி உலகை உங்களுக்கு மேலும் அறிமுகம் செய்ய‌, அதற்குரிய கடவுச்சீட்டான பான் கார்டுக்கு விண்ணப்பிக்க‌

  • உஙகள் வயது, சூழ்நிலை, வருமானம், வசதி, குடும்பம், முதலீடு செய்யவிரும்பும் காலம் என்ற நிலை அறிந்து உங்களுக்கேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்த‌

  • உங்களுடைய முதலீட்டு நிலையை தொடர்ந்து கவனித்து தகவல் அளிக்க‌

  • தொடர்ந்து உங்கள் முதலீட்டுத் தேவைகளுக்கு (வாங்க/விற்க‌) உதவ‌

  • சந்தை நிலவரம் தெரிவிக்க, புதிய திட்டங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய‌

நீண்டகால நண்பனாக உங்கள் நிதித்திட்டமிடலில் பங்குபெற‌ நான் தயார், நீங்களும்தானே!

உங்கள் உழைப்பில் வந்த‌ பணம் இனி உங்களுக்கு உழைக்கட்டும்.
வாருங்கள் இந்தியாவில் முதலிட்டு இந்தியாவோடு வளர்வோம்
!

என்றென்றும் அன்புடன்,
அன்பு

குறிப்பு:

  • தற்போது ரிலையன்ஸ், சுந்தரம் பிஎன்பி, கனரா ரொபெகோ, லோட்டஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் திட்டங்களை வழங்குகின்றோம். மற்ற நிறுவனங்களின் திட்டங்கள் விரைவில்.

  • விநியோகிப்பாளர்/முகவர் மூலம் செய்யப்படும் முதலீ்டுகளுக்கு, திட்டத்துக்கு ஏற்ப நிறுவனங்களின் நுழைவு/வெளியேறு கட்டணம் (Entry/Exit Load) உண்டு.

  • ஒரு ஒப்பீட்டுக்காக பிரிவு வாரியாக சராசரி வளர்ச்சிவிகிதமும், நாங்கள் விநியோகிக்கும் திட்டங்களின் பலன்களும் கடைசிப்பக்கத்தில் அளித்திருக்கிறோம்.

  • பரஸ்பரநிதி முதலீடுகள் சந்தை நிலவரத்தைப்பொருத்தது. பங்குச்சந்தை தொடர்பான மற்ற முதலீடுக‌ள் போலவே பரஸ்பரநிதியின் வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்குட்பட்டது. முந்தைய வருட செயல்பாடுகள், வருங்காலத்துக்கு உத்தரவாதமாக எடுத்துக்கொள்ள இயலாது.

Saturday, January 12, 2008

ரிலையன்ஸ் இயற்கைவள நிதி (Reliance Natural Resources Fund)


ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து வெற்றிகரமான Reliance Diversified Power Sector Fund வரிசையில் மற்றுமொரு புதியதிட்டம்: ரிலையன்ஸ் இயற்கைவள நிதி. இயற்கைவளம் சார்ந்த இந்திய, வெளிநாட்டு நிறுவனப்பங்குகளில் முதலீடுசெய்ய இருக்கும் ஒரு புதிய நிதி வெளியீடு.

இந்த நிதி பற்றிய ஒரு அறிமுகம் கீழே.

(An Open Ended Equity Scheme)
The primary investment objective of the scheme is to seek to generate capital appreciation & provide long-term growth opportunities by investing in companies principally engaged in the discovery, development, production, or distribution of natural resources and the secondary objective is to generate consistent returns by investing in debt and money market securities.

This fund will allow investor to participate in Indian and Global stocks of :

* Minerals & Commodities
E.g. Copper, Iron-ore, Zinc
* Precious Metals
E.g. Gold, Silver, Diamonds
* Energy Resources
E.g. Coal, Oil, Natural Gas, Uranium, Lignite
* Non-conventional resources
E.g. Air, Water, Solar
* Agricultural Products
E.g. Cotton, Wheat, Corn, Rice
* Ancillaries to the above
E.g. Component suppliers, Equipment suppliers
* Other related companies

இந்தத்திட்டம் பற்றிய மேல் விபரங்களுக்கு:

இந்தத்திட்டத்தில் முதலீடுசெய்ய விண்ணப்பம் & வழங்குபத்திரம் தரவிறக்கம் செய்ய (To Download Application & Offer Document)

மேல் விபரங்களுக்கு: parasparfund@gmail.com

Thursday, January 3, 2008

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் அட்டை (PAN Card) கட்டாயம

வணக்கம்.

இந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் அட்டை கட்டாயம். இதுவரை ரூ. 50‍ ஆயிரத்துக்கு மேல் என்றால்தான், என்ற நெறிமுறையிலிருந்து தனிநபர் முதலீட்டாளர்கள் அனைவருக்கும்/முதலீடு எவ்வளவாயிருந்தாலும் பான் அட்டை இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

பான் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்ப நிலை அறிய:
இணைய முகவரி

இணையவழி விண்ணப்பித்தாலும், டி.டி, புகைப்படம், முகவரி அத்தாட்சிகள் போன்றவை தபாலில்தான் அனுப்பவேண்டும். அதுபோக இணையவழி விண்ணப்பத்திலும் வரைவோலை எண் குறிப்பிடவேண்டியிருக்கும்.
அதனால் எல்லாவற்றையும் இணையவழி உள்ளிட்டு, பிரதியெடுத்து அத்தாட்சிகளுடன் அனுப்பவோ

அல்லது

கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பத்தை இறக்கி நீங்களே எல்லாவற்றையும் கையில் எழுதி அனுப்பவோ செய்யலாம்.
http://www.tin-nsdl.com/downloads/Form-49A_260907.pdf
ஆனால் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு விண்ணப்ப அத்தாட்சி எண் (Acknowledgment No. to Track)
கிடைக்காது.

இந்தியாவில் உள்ளவர்கள் ரூ. 67, வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் முகவரிக்கு அனுப்ப ரூ. 717க்கும் டி.டி. எடுக்க வேண்டியிருக்கும்.

இது தவிர வங்கிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.

பான் அட்டை உங்கள் கையில் கிடைக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை பாரம் 60 (Form 60) மூலம் முதலீடு செய்யலாம். பின்னர் அட்டை வந்த பிறகு பிரதி அனுப்பினால் போதுமானது.

மேலும் ரூ. 50,000க்கு அதிகமான முதலீட்டுக்கு இந்த ஜனவரியில் இருந்து KYC (Know Your Customer) எனப்படும் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்' படிவத்துக்குண்டான தகவல்கள்/அத்தாட்சிகளும் அளிக்கவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

More info. on PAN Card
FAQ on PAN

மியூச்சுவல் ஃபண்ட் - தமிழில்

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி வலைப்பதிவுகளில், நாணயம் விகடன் போன்ற இதழ்களில் பல தொடர் கட்டுரைகள் வந்திருந்தாலும் ஒரே புத்தகமாக தமிழில் "கிழக்கு பதிப்பகம்" கொண்டு வந்திருக்கிறது, தகவல் அவர்களுடைய இணைய தளத்திலிருந்து:


மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)



பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமானதுதான். கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்க முடியும்தான். ஆனால் பலத்த ரிஸ்க் உள்ள ஏரியா அது! ஆழம் தெரியாமல் காலை விட்டால் அதோகதியாகும் அபாயம் எக்கச்சக்கம்.

எனக்கு ரிஸ்கெல்லாம் வேண்டாம்ப்பா என்கிறீர்களா? பாதுகாப்பாக, கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைப் பெருக்கினால் போதும் என்று தோன்றுகிறதா? வங்கி ஃபிக்சட் டெபாசிட்தான் சுலப வழி. ஆனால் போரடித்துவிடும்.

இந்த இரண்டு தவிர, மூன்றாவதும் ஒன்று உண்டு. அதுதான் மியூச்சுவல் ஃபண்ட். கையைச் சுட்டுக் கொள்ளாமல் அதேசமயம் கணிசமாகச் சம்பாதிக்க நினைப்பவர்களின் தாரக மந்திரம் இன்று இதுதான்!

உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கிற லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கண கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் ஃபண்ட்தான்.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? எப்படி அது லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறது? எது நல்ல மியூச்சுவல் ஃபண்ட்? மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நஷ்டம் வரவே வராதா? இதுவும் பங்குச் சந்தைதானாமே?

ஆயிரம் கேள்விகள். அதைவிட அதிகக் குழப்பங்கள். கவலையை விடுங்கள். லட்டு மாதிரி எளிமையாக விளக்குகிறது இந்த நூல்.

புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடத் தயாராகிறீர்கள் என்றால், முதலில் ஒரு மணிநேரம் உட்கார்ந்து இதைப் படித்துவிடுங்கள். அதன்பின் எந்தக் குழப்பமும் இல்லாமல் எளிதாகப் புகுந்து விளையாடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)
Pages: 151
ISBN: 978-81-8368-528-3
Category: Business